Sunday 19th of May 2024 08:33:25 AM GMT

LANGUAGE - TAMIL
13வது ஜ.பி.எல்: முதல் போட்டியில் சென்னை-மும்பை பலப்பரீட்சை!

13வது ஜ.பி.எல்: முதல் போட்டியில் சென்னை-மும்பை பலப்பரீட்சை!


இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 13 வது பருவகால போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரும் மார்ச் 29 இல் தொடங்கும் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில், டெல்லி கெப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச்-29 ம் திகதி இரவு 8.00 மணிக்கு நடைபெறும் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் 3 முறை சம்பியனான தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE